Thursday, November 12, 2009

முதுமைப்பருவம்


தாய் தன்கருவறையில்

ஈரு ஐந்து மாதங்கள்

சுமந்து பெற்றெடுக்கிறாள்

பிள்ளைச்செல்வம் -அது

அவளுக்கு சுமையில்ல

பிஞ்சு முகத்தைப்பார்ப்போம்

என்ற சுகம்தான் !

பிள்ளையின் குழந்தைப்பருவம்

அவள் கைப்பிடித்து

நடைபழகும்

முகம் பார்த்து

மொழி பழகும்!

பிள்ளையின் இளமைப்பருவம்

ஈரு ஒன்பது வருடங்கள்

குழந்தையின் வளரும்பருவம்

பார்த்து மகிழ்கிறாள்! - ஆனால்

தாய்க்கு தன்மகன்

கைப்பிடித்து நடைபழகும்

பருவம்தான் முதுமைப்பருவம்

அப்போதுதான்-

மகனோ தாய்க்கு

ஒர் இல்லம்

தேடுகிறான் - அதுதான்

முதியோர்இல்லம்!! - அப்போதும்

குழந்தைப் பருவமாகத்தான்

தன்மகனின் முகம்பார்த்து

புன்னகை பூக்கிறாள் - தாய் !!!!



அன்புடன், S.SVSugarsen


Wednesday, July 1, 2009

தமிழி்ல் அறிவோம் தமிழ்

பல்பு(அதாங்க மஞ்சள் நிறத்தில எரியுமே..வீட்டில.. )அதனுடைய தமிழ்ச்சொல் என்ன?

இனிமையான தமிழ்பெயர் : மின்குமிழ்

Thursday, June 18, 2009

வருது..வருது..வருது..தத்துவம்:

தேனீயைப்போல் சுறுசுறுப்பாக இயங்கவேண்டும்.. மாட்டைப்போல் கடினஉழைப்போடு உழைக்கவேண்டும்.. யானையின் தும்பிக்கைப்போல் நம்பி்க்கைவேண்டும்.. இம்மூன்றுடன் தன்மீது தன்னம்பிக்கைவைத்து முயற்சிசெய்.. சத்தியமாக வெற்றி நிச்சயம்.


அன்புடன், S.SVSugarsen


Wednesday, June 17, 2009

வா நிலவுக்குள் உங்கள் பார்வை பதிய தங்கப்பாப்பா இணையத்தை பாருங்கள்

Tuesday, June 16, 2009