முதுமைப்பருவம்
தாய் தன்கருவறையில்
ஈரு ஐந்து மாதங்கள்
சுமந்து பெற்றெடுக்கிறாள்
பிள்ளைச்செல்வம் -அது
அவளுக்கு சுமையில்ல
பிஞ்சு முகத்தைப்பார்ப்போம்
என்ற சுகம்தான் !
பிள்ளையின் குழந்தைப்பருவம்
அவள் கைப்பிடித்து
நடைபழகும்
முகம் பார்த்து
மொழி பழகும்!
பிள்ளையின் இளமைப்பருவம்
ஈரு ஒன்பது வருடங்கள்
குழந்தையின் வளரும்பருவம்
பார்த்து மகிழ்கிறாள்! - ஆனால்
தாய்க்கு தன்மகன்
கைப்பிடித்து நடைபழகும்
பருவம்தான் முதுமைப்பருவம்
அப்போதுதான்-
மகனோ தாய்க்கு
ஒர் இல்லம்
தேடுகிறான் - அதுதான்
முதியோர்இல்லம்!! - அப்போதும்
குழந்தைப் பருவமாகத்தான்
தன்மகனின் முகம்பார்த்து
புன்னகை பூக்கிறாள் - தாய் !!!!
அன்புடன், S.SVSugarsen